Pommu Construction Rayagiri

Pommu Construction Rayagiri Building Contract, Approval Govt plan..Vasthu plan.Estimation, Consulting work,3d Elevation Drawing Etc...

GOat farm shed work complete with 1550 sq.ft...
24/09/2018

GOat farm shed work complete with 1550 sq.ft...

23/08/2018

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

அப்போது ஒரு மாணவர் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...

மாணவர் : இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.

ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?

மாணவர் : சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.

ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.

மாணவர் : ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.

ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.

இருப்பினும் மாணவர் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து மாணவர் வகுப்பில் உள்சென்றார்

இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.

மாணவரின் தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். மாணவரின் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணி மாணவரிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற மாணவர் எழுத வேண்டும்.

அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் மாணவரை நெருடியது. அவ்வாக்கியம்,

ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.

இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக மாணவருக்கு நினைவுக்கு வர, தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினான்.

பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.

அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.

இந்த விளக்கம் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். மாணவரும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டான் . அதற்கு தாத்தா கூறிய வார்த்தைகள் தான் மாணவர் மிகவும் பாதித்தது.

அவ்வார்தைகள்.....

உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துக்கு போ....

ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைவோம் .

ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???

எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????

உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன?
சிந்தியுங்கள் நண்பர்களே???

*இப்போது உள்ள கல்வி முறை ஆங்கிலேயர்கள் நம்மை சிந்திக்க விடாமல் நம்மை அடிமையாக அலுவலக உதவியாளர் பணிக்கு தயார் படுத்திட உருவாக்க பட்ட பாடத்திட்டம் தான் இன்றைய போதனை வழி கல்வி முறையும்,*
*புரிந்து கொள்ளாத மொட்டை மனப்பாட கற்றல் முறையும்.*

படித்ததில் பிடித்த பதிவு.
=======================

14/08/2018
14/11/2017

ஜல்லிகள் ஜாக்கிரதை

சாதாரண பொதுமக்கள் முதல் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் வரை சிமெண்ட், ஸ்டீல் போன்ற பொருட்கள் மீது கொண்டிருக்கும் அதே விழிப்புணர்வை கான்கிரீட்டின் உறுதுணையாக விளங்கும் கருங்கல், ஜல்லிகள் மீதும் கொண்டிருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. உண்மையில் பிற கான்கிரீட் கூட்டுப்பொருட்கள் மீது கொண்டிருக்கும் அதே முக்கியத்துவத்தை ஜல்லிகளுக்கும் தருதல் வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், விலை அதிகமான சிமெண்ட் எவ்வளவு முக்கியமோ, அதே அளவில் விலை குறைவான ஜல்லிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜல்லிகள் கான்கிரீட்டுக்கு உருவம், கொள்நிலை மாறாத்தன்மை மற்றும் சிக்கனத்திற்கு வழி வகுக்கின்றன.

ஜல்லிகளில் பலவகை உண்டு. தரமான குவாரிகளில் கிடைக்கும் ஜல்லிகள்தான் கட்டுமானத்திற்கு சிறந்தது. சோற்றில் கல் இருந்தால் எப்படி தூக்கி வீசுகிறோமோ அது போல கல்லில் (ஜல்லி) தூசிகள் இருந்தால் அது சோறாக இருந்தாலும் அப்புறப்படுத்த வேண்டியதுதான். ஜல்லிகள் கெட்டிப்பட்ட கான்கிரிட்டிற்கு வலிமை, விரைப்புத்தன்மை, குறைவான சுருக்கம், அடர்த்தி, நீடித்துழைக்கும் தன்மையைத் தருகின்றன. கான்கிரீட்டில் 70-80 சதவீதம் ஜல்லி-மணல்கள் உள்ளன. ஜல்லி அளவு குறையுமானால் இடைவெளி அதிகரித்து, சிமெண்டு பசையின் அளவு அதிகரிக்கும். இதனால், கான்கிரீட்டில் வெப்ப உயர்வு, சுருக்கங்கள், நுண்வெடிப்புகள் தோன்றவாய்ப்பு உண்டு.

ஜல்லிகளின் அளவு :

ஜல்லிகளின் பொது அளவுகள் 40 மி,மீ, 20 மி.மீ, 12.5 மி.மீ மற்றும் 10 மி.மீ ஆகும். ஒவ்வொரு அளவுள்ள ஜல்லியும் எப்படி ரகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ரகப்படுத்தப்பட்ட ஜல்லிகளையே உபயோகிக்க வேண்டும், இதனால் ஜல்லிகள், கான்கிரீட் அதிக அளவிற்கு அடைப்படும் தன்மையை பெறுகின்றன, இதனால் சிமெண்ட்-மணல் தேவை குறையும், கான்கிரீட் நீடித்துழைக்கும், 20 மி,மீ. என்ற அளவில் மட்டும் வாங்குவது சரியாக இருக்காது. 20 மி.மீ
மற்றும் 10 மி.மீ. என்ற இரண்டு பகுதிகளாக பெற்று நமது கட்டுமானப் பணிக்கு உகந்த கான்கிரிட்டிற்கு தேவையான விகிதாசாரத்தில் கலக்கவேண்டும்.

தரமான ஜல்லி :

களிமண், வண்டல் மண் போன்றவை ஜல்லியில் இருந்தால் அவற்றை நீக்க ஜல்லியை கழுவவேண்டும். இல்லாவிட்டால் ஜல்லி, மணல், சிமெண்ட் இடையே சரியான தேவையான பிணைப்பு ஏற்படாது. தாவர, உயிர்ப்பொருட்கள் (வேர் போன்றவை) ஜல்லிகளில் கலந்திருந்தால், அவற்றை எடுத்துவிடவேண்டும், இல்லாவிட்டால் கான்கிரீட்டின் வலிமை குறையும்.
ஜல்லிகள் பல வடிவங்களில் கிடைக்கின்றன, கனச் சதுரமாகவும், கோணல்களுடனும், தீர்க்கமான விளிம்புகளுடனும் உள்ள ஜல்லிகள் சிறந்த பலனை அளிக்கும். அதேசமயம் உருண்டை வடிவ ஜல்லிகளை உபயோகிப்பதில் தவறில்லை.
செதில் வடிவ நீண்ட ஜல்லிகளை உபயோகித்தால் கான்கிரீட்டின் ஆரோக்கியம் குறையும். செதில் வடிவ மெல்லிய நீண்ட ஜல்லிகளை வெளியே எடுத்தபிறகே மற்ற ஜல்லிகளை உபயோகிக்க வேண்டும்.
ஜல்லிகள் தயாரிப்பாளர்கள், விற்பனை செய்பவர்களிடமிருந்து ஜல்லிகள் I.S 383 குறிப்பேட்டிற்கு உட்பட்டுள்ளது என்பது பற்றிய சான்றிதழை கேட்டு வாங்கவேண்டும்.

ஜல்லிகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

கட்டுமானத்தொழிலில் பயன்பாடுகளுக்கு ஏற்ப ஜல்லிகள் சுத்தமாக சரியான அளவுகளில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். 11/2, 3/4, 1/2, 1/4, அளவுகளில் ஜல்லிகள் கிடைக்கிறது. 20 mm. 12 mm, 6 mm என பயன்பாட்டு அளவிற்கு ஏற்ப ஜல்லிகள் உடைக்கப்படும்.

20 mm ஜல்லிகள் வீடு கட்டுவதற்கும், தார்ச் சாலை போடுவதற்கு பயன்படும், 1: 2: 4 என்ற விகிதத்தில் கலவை போட்டால் சிறந்த கான்கிரீட் கிடைக்கும். பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் 20 mm (தனிமுக்கால்) ஜல்லிகளை அதிகமாக பயன்படுகிறார்கள். இதனை போடுவதால் சிமெண்ட் நுகர்வு (Cement Consumption) குறைவாக இருக்கும். ஆனால் கலவை உறுதியாக இருக்காது. இது கட்டுமானத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

கான்கிரீட் கலவை விகிதத்தின் போது ஜல்லிகளின் அளவு (Size) எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அறிய ஒரு சோதனை உண்டு. 1x11 சதுர அடிக்கு 1 கான்கிரீட் கட்டை (Cube) ) தயார் செய்ய 3/4," (20 mm ஜல்லியை நிரப்பி சாந்து கொட்ட வேண்டும். இந்த கான்கிரீட் கட்டை உலர்ந்த பிறகு உடைத்து உள்ளே பார்த்தால் வெற்றிடங்கள் (Voids) இருக்கும். எனவே, 70 சதவீதம் 3/4,’’ ஜல்லியையும் 30 சதவீதம் 1/2'’ ஜல்லியையும் பயன்பாட்டுக்கு ஏற்ப பயன்படுத்தி கான்கிரீட் போட்டால் எதிர்காலத்தில் வெடிப்புகள், கீறல்கள் (Hairline Crack) ஏற்படாது.

தரமற்ற ஜல்லிகள் தரும் ஆபத்து :

ஜல்லிகளின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு இன்று தேவை. இது இல்லாததால்தான் சாதாரண பாறை கற்கள் மற்றும் கிணற்று ஜல்லிகளை எல்லாம் இடித்து ஜல்லி என்ற பெயரில் விற்று வருகிறார்கள். இந்த ஜல்லிகளைப் பயன்படுத்தி கட்டடம் கட்டினாலோ, தளம் போட்டாலோ கட்டத்திற்கு மிகவும் ஆபத்து.

இந்த ஜல்லிகளால் மின்கசிவு, வெடிப்பு, கீறல் போன்றவை ஏற்படும், ஒரு டன் அழுத்தத்தைக் கூட இந்த ஜல்லிகள் பயன்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் தாங்காது. அதேபோன்று ஒரே அளவான தனி ஜல்லி
யைப் பயன்படுத்துவதும் தவறு. 3/4,’’ ஜல்லியும் 1/2'’ ஜல்லியும் கலந்து இருக்க வேண்டும். தனிமுக்காலும் தனி அரையும் வாங்கி 1 : 1 அல்லது 2 : 1 அல்லது
3 : 1 என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும். பளபளப்பு (மைகா) அதிகம் உள்ள ஜல்லியும், தகடு போன்ற ஜல்லியும் தரக்குறைவானதாகும்..

Discover CivilQuestions :- Estimate this Slab (Drawing Included).Calculation :-Estimate for Slab Casting (1:2:4).= 1x28'...
25/10/2017

Discover Civil

Questions :- Estimate this Slab (Drawing Included).
Calculation :-
Estimate for Slab Casting (1:2:4).
= 1x28'-6"x20'-11"x0'-5" = 247.98 Cft. = 7.021 Cum.
Estimate for Formwork.
Soffit = 1x28'-6"x20'11" = 596.10 Sft.
Side = 1x2(28'-6"+20'-11")x0'-5" = 41.11 Sft.
Total Formwork = 637.21 Sft. = 59.22 Sqm.
Estimate for Reinforcement.
Short Direction Rod:-
10 mm @ 5" C/C Alt Ckd.
Ckd = 1x19x29'-0" = 551.00 Rft.
St = 1x18x26'-9" = 481.50 Rft
Ext Top = 2x18x5'-4" = 191.98 Rft.
= 1x18x7'-10" = 141.00 Rft.
Binder = 15x28'-6" = 427.50 Rft.
Long Direction Rod :-
10mm @ 7" C/C Alt Ckd.
Ckd = 2x11x21'-2" = 465.65 Rft.
St = 2x10x18'-11" = 378.32 Rft.
Ext Top = 2x10x8'-10" = 176.66 Rft.
= 2x10x7'-1" = 141.66 Rft.
Binder = 4x20'-11" = 83.66 Rft.
Total 10mm Dia Rod = 3038.93 Rft = 568.27 Kg.

மருத்துவ வாஸ்து-2------------------------------வீட்டுமனையின்  நான்கு மூலைகளும் 90 பாகைகளுக்கு சரியாக அமைக்கப்பட்டிருக்கவ...
17/10/2017

மருத்துவ வாஸ்து-2
------------------------------
வீட்டுமனையின் நான்கு மூலைகளும் 90 பாகைகளுக்கு சரியாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு அமைந்தால் பஞ்ச பூதங்கள் சம நிலைப்படும். மூலைகள் வளர்ந்தாலோ, வெட்டுப்பட்டாலோ முறையே அவை பஞ்ச பூத தத்தத்துவங்களை கூட்டவோ ,குறைக்கவோ செய்யும், மூலைகளுக்கு ஏற்படும் தெருத்தாக்கங்கள் தத்துவங்களை மிகைப்படுத்தும். தத்துவங்களுக்குள் நட்பு,பகை உண்டு. பகை தத்துவ இணைவால் தத்துவ கண்டாந்தங்கள் ஏற்படும். நீரும்,நெருப்பும் பரஸ்பர பகை. நிலமும்,காற்றும் பரஸ்பர பகை. பரஸ்பர பகை பெற்ற தத்துவங்கள் இணைவு பெற்றால் அவை மரணத்திற்கு ஒப்பான கண்டங்களை ஏற்படுத்தும்.

30/09/2017

உலக பணக்காரர்,
கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் *பில் கேட்ஸ்* இடம் ஒருவர் கேட்கிறார்.

"உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?"

*ஆம். ஒருவர் இருக்கிறார்*

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.
நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.
நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. எனவே, அதை விடுத்தேன். அப்போது,
ஒரு கருப்பினச் சிறுவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.
என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை ,
இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.
மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.

*19 வருடங்கள் கழிந்தன.*
நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.
ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.
அவனைக் கேட்டேன்.

"என்னைத் தெரிகிறதா ?"

"தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த *பில்கேட்ஸ்*"

பல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன். தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.

*"உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது."* என்றான் அந்தக் கருப்பு இளைஞன்....

*""ஏன் ? "*என்றேன் நான்.

அந்த இளைஞன் *"நான் ஏழையாய் இருந்த போது* , *உங்களுக்குக் கொடுத்தேன்* *ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்.*
*ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் ??? "* என்றான்...

*கருப்பு இளைஞன் தான் என்னை விடப்* *பணக்காரன் என்பதை* *உணர்ந்தேன்.""* *என்றார் பில்கேட்ஸ்.*

*கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்க* *வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும்* *வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது....*
*உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது கிடையாது*

மகிழ்வித்து மகிழ்வோம்...

Q.  HOW TO CHECK QUALITY OF CEMENT AT SITE?Answer:. Cement is one of the most important materials used in construction. ...
22/09/2017

Q. HOW TO CHECK QUALITY OF CEMENT AT SITE?

Answer:. Cement is one of the most important materials used in construction. The strength of a structure depends upon several factors, cement quality is one of them. To achieve the desired strength of concrete and to increase the longevity of structure good quality cement should always be used.

So it is important to check the quality of cement before using. In our previous article, we have already discussed the different types of cement and their uses in construction. Today we will discuss how to check the quality of cement at site.

To check the quality of cement we need to pass some easy tests which are described below.

"""""""""""""""""""""""""""""""""""""
To check the quality of cement we need to pass some easy tests which are described below:
1. DATE OF PACKING:
The strength of cement decreases with time. First of all, check the manufacturing date in the bag before using. Generally, cement should be used before 90 days from the manufacturing date. The percentage of strength loss of cement is given in the below table.

Age of cement. %reduction of strength

"""""""""""""""". """"""""""""""""""""""""

3 months. 20-30

6 months. 30-40

12 months. 40-50

2. CEMENT COLOR:
The cement should be uniform in color. Good quality cement should have gray color with greenish shade.

3. CHECK FOR LUMPS:
No lumps should be present in the cement. Lumps are formed due to absorption of moisture from the climate.

4. RUBBING TEST:
Cement should feel smooth while rubbing in between fingers. If it gives a rough feeling that means cement is mixed with sand.

5 TEMPERATURE TEST:
Simply insert your hand into the cement bag, it should give cool feeling if its quality is good. Otherwise, you may feel warm because of hydration reaction.

6. FLOAT TEST:
Take some amount of cement and throw it in water. The cement should float for sometimes before it sinks in the water.

7. SETTING TEST:
Make a thick cement paste with water and immerse it in water for 24 hours. It should be set and should not develop cracks.

8. STRENGTH TEST:
Prepare a cement block of 25 mm x 25 mm and 200 mm in length. Now submerge it in water for 7 days. Now place it on supports 15 cm apart and load it with 34 kg weight. Block made from good cement will not show any signs of failure.

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் பட...
20/09/2017

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?
மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?, tmc என்றால் என்ன ?, நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.

ஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.

சிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,

பெரிய அளவில் அளக்க ,

1)வெயர் முறை(weir method)
2)டாப்ளர் முறை பயன்படும்!
வேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே!

வெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.

உதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

கொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து
உயரத்தை அளவிட்டு விடுவார்கள்

(weir construction)
இத்தனை அடி உயரத்தில் நீர் போனால்
இவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.

காவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.

இதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.

உயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.

நதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும். எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்
பொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.
( low head dam)

பிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.

உபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc.
நன்றி.... பொறியளார். சரவணன்...

1 inch = 2.54 cm16 x 2.54 = 40cmSo, 16 is the Inches
19/08/2017

1 inch = 2.54 cm
16 x 2.54 = 40cm
So, 16 is the Inches

19/08/2017

HOW TO CALCULATE CEMENT, SAND QUANTITY FOR PLASTERING?

Following points should be remembered while calculating the quantity of cement, sand for plastering work.

1. For wall plastering, Cement : Sand = 1 : 6

2. For ceiling plastering,Cement : Sand = 1 : 4

3. Thickness of plaster should be in between 12-15 mm. If an additional coat is required then do not do it at one go.

4. Use good quality of cement & Sand.

5. Use measuring box (not head pan) for site mix.

We will calculate cement and sand for 100 m2 plastering area in 1:6 ratio and thickness of 12 mm.

Cement Mortar Required:

Plastering thickness = 12 mm

= 12/1000 = 0.012m

Volume of cement mortar required = ( Plastering Area x thickness )

= 100 m2 x 0.012m = 1.2 m3

(This is wet volume of cement mortar (after mixing water) but we need dry volume. To get dry volume consider 35% bulking of sand and 20% wastages

= 1.2 m3 x (1+0.2+0.35) (Rather than 35% sand bulkage and 20% wastage you can add 1.54 as constant)

= 1.86 m3

Cement : Sand = 1 : 6

Sum of ratio =( 1 + 6) = 7

∴ Cement required

= 1.86 x 1/7

= 0.265 m3

= 0.265/0.0347 ( 0.0347 m3 = 1 bag = 50 kg cement)

= 7.66 bags (≈ 8 Bags)

∴ Sand required

= 1.86 x 6/7

= 1.59 m3

Here we have calculated in Sq.m but you can also calculate it in Sq.ft....
Er.S.Saravanan.,Pommu Construction..

Useful Information. About One-Way Slab:“The slab which resists the entire/major part of applied load by bending only in ...
19/08/2017

Useful Information. About One-Way Slab:

“The slab which resists the entire/major part of applied load by bending only in one direction.

1) If slab is supported on all four sides and R = (Shorter side / Longer side) < 0.5 it behaves as one-way slab. Analysis and Design of Slabs

2) Slabs having supports on less than four sides can be designed as one-way.

3) Two edge supported slab is always one-way.

4) Cantilever slab is always one-way.

5) Main steel is only provided parallel to span

6) One-way slab is designed as singly reinforced rectangular section.

7)h(min) for the slab is different compared with the beams..
Er.S.Saravanan., Pommu Construction..

Address

80, Mandapa Street, Rayagiri
Tirunelveli
627764

Alerts

Be the first to know and let us send you an email when Pommu Construction Rayagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share