29/11/2025
28.11.2025 மாலை 04.38 மணி முதல் இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இணைய சேவை (Internet) மற்றும் தொலைபேசி சேவைகள் (Airtel, Dialog) அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் போன்ற சில பகுதிகளில் மழை குறைவாக இருந்தபோதிலும், சிக்னல் (Signal) இல்லாமல் இருப்பது அல்லது “No Service” என காட்டுவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.முக்கியக் கேபிள்கள் மற்றும் மைக்ரோவேவ் இணைப்புகள் (Microwave Links) சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் அல்லது திருகோணமலை வழியாகவே வருகின்றன. அந்தப் பகுதிகளில் உள்ள கோபுரங்கள் பாதிக்கப்பட்டால், யாழ்ப்பாணத்திலும் சிக்னல் துண்டிக்கப்படும். இதுவே “மழை இல்லை, ஆனால் சிக்னல் இல்லை” என்ற நிலைக்குக் காரணம்.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன, ஆனால் மோசமான வானிலை காரணமாகச் சில இடங்களில் தொழில்நுட்பக் குழுவினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, இயற்கை அனர்த்தம் சார்ந்த தற்காலிகப் பிரச்சனை.